Tuesday, December 25, 2012

தல ரசிகனான கதை (2)


சென்னை எம்.ஐ.டியில் இன்ஞினியரிங் சேர்ந்து புதிய சாளரம் திறந்தாச்சு. 'ஆஞ்சநேயா', 'ஜனா' ஆகிய படங்கள் ஜுனியராக இருந்த நேரத்தில் ரிலிஸ்.பார்க்கவில்லை.

'அட்டகாசம்' தான் என்னுடைய அடுத்த ரவுண்டிற்கு அடிக்கல் என்றால் மிகையாகாது.

எனக்கு மட்டுமில்லாமல் சுற்றுப்பட்டு 18 ஊரின் அஜித் ரசிகர்களுக்கும் ஆஸ்தான தியேட்டரான தாம்பரம் வித்யாவில் முதல் நாள் இரண்டாவது காட்சிக்கு மிகப்பெரிய க்யூவில் நின்று முதல் பாட்டு முடிந்த பின் தான் உள்ளே போக முடிந்தது.

படம் பக்கா மாஸ்.புல்லரிப்பு. முதல் பாட்டை மிஸ்ஸியதால் திரும்பவும் பார்த்தேன்.

பின்புக்கு பின்பு அப்படம் கல்லூரி OATயில் திரையிட்டபோது நானும் சீனியர் சுஜுவும் தேங்காயில் சூடம் ஏற்றி உடைத்தோம்.ஆனால் அம்முறை படம் மொக்கையாக தெரிந்தது (இதை யாரும் நோட் பண்ணாதிங்க).

அடுத்ததாக 'ஜி' பாட்டு ரிலிஸ் ஆனதிலிருந்து 'சேமியா போல மீசை வச்ச சிறுத்தை நாங்க' பாட்டை தான் சேமியா மீசை வைத்திருந்த நான் அதிக முறை கேட்டிருப்பேன். ஆனாலும் படம் முதல் 3 நாளில் பார்க்கமுடியாமல் போனதால் 'நீ எல்லாம் என்னடா அஜித் ரசிகர்?' என்று படத்தை வீம்புக்கு பார்க்காமல் நீண்ட இடைவெளிக்கு பின்பு இந்திய டிவியில் முதல்முறையாக போட்டபோது வீம்பை தளர்த்தினேன்.

அப்பறம் தல புருஷ்லி போல மாறினார். மாறினபின் முதலில் வெளிவந்த 'பரமசிவன்' படத்துக்கு முதல்நாள் இருந்த கூட்டம் போல நீங்கள் ரெங்கநாதன் ஸ்ட்ரீட்டில் மட்டுமே பார்க்கக்கூடும்.
வித்யா தியேட்டரில் இருந்து பக்கத்து தெரு வரைக்கும் துரத்தி போலீஸ் அடி கொடுக்க ஓடி வந்து நேசனலில் சிம்புவின் 'சரவணா' விற்கு சென்றோம்.

அதனால் பரமசிவனை அடுத்த நாள் நைட் சோ தான் பார்க்க முடிஞ்சது.படம் குப்பை.ஆனாலும் ரெண்டு தடவை பார்த்தேன்.

தமிழ் புத்தாண்டு அன்று ரிலிஸான 'திருப்பதி' டிக்கெட்டுக்கு லைன்ல நிற்கும் போதே செருப்பு பிஞ்சு போச்சு.நரி மூஞ்சியில் முழிக்கலைங்க,கூட்டம் அப்படி! பிஞ்ச செருப்பை கைல தூக்கிட்டு உள்ளே போய் சீட் பிடித்து 'டே ராஜா இங்க வாடா' னு என் நண்பனை சீட் மேல ஏறி நின்னு கூப்பிட்டா போலிஸ் கிட்ட அடி(யோசிச்சு பார்த்தா நரி மூஞ்சி தான் போல).

வாழ்கையில் முதல் முறையாக 'கீரை விதைப்போம்' பாட்டை ஒன்ஸ்மோர் போட்டார்கள். இதுவரைக்கு வேறு பாட்டை நான் பார்த்ததில்லை.

அக்காலகட்டத்தில் கடைசியாக வித்யா தியேட்டரில் நன்றாக ரசித்து 2 முறை பார்த்த அஜித் படம் என்றால் 'வரலாறு' தான்.

ஏன் என்றால் 'ஆழ்வார்' தாம்பரம் நேசனலில் ரிலிஸ்.அப்பவே மொக்கையாக இருக்கும் என்று நம்பினேன் அது குப்பை தியேட்டர் என்பதால். முதல் ஷோ சென்ற தோழர்களிடம் ரிவ்யூ கேட்டால் அனைத்து துவாரங்களிலும் இரத்தம் என்றார்கள். சரி எதுக்கு ரிஸ்க் என்று நான் திருட்டு டிவிடில தான் பார்த்தேன். படம் சூப்பர்.

ஒரு சூட்சமம் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் தான் எனக்கு புரிந்தது. அது 'மொக்கைனு நினைத்து அஜித் படம் பார்த்தால் படம் சுமார் என்றால் கூட சூப்பர் போல தோன்றும்' என்பது.

இப்ப நினைக்கையில் மீண்டும் தாம்பரம் வித்யா தியேட்டரில் அதே கூட்ட நெரிசலில் நின்று அஜித் படம் பார்க்கும் அனுபவம் கிட்டுமா என்ற ஏக்கம் தான் மிச்சமிருக்கிறது.

(தொடரும்)


2 comments:

suresh said...

ஊர்ஸ் கலக்குங்க நல்ல பதிவு ...

வேணும்னா வாங்க , நாம போவோம்..

க.தமிழினியன் said...

@suresh

நன்றிகள்!

ஊர்ஸ் நான் எப்பயும் ரெடி தான் நீங்க கூப்பிட்டால்.