Wednesday, January 4, 2012

டி.ராஜேந்தர் Vs பேரரசு

பேரரசு இயக்கிக்கொண்டிருக்கும் திருத்தணி படத்தில் அவரே இசையமைப்பாளர். இச்செய்தியின் மூலம் பேரரசு தான் டி.ராஜேந்தரின் அதிகாரப்பூர்வ கலையுலக வாரிசு என்று பேச்சுக்களும் வருகிறது. இத்தருணத்தில் இருவரை பற்றியும் சிறு ஆய்வு செய்தால் என்ன? என்று எழுதப்பட்ட கட்டுரையே இது.

                                  
டி.ஆர் +



·      டி.வி சீரியலின் ஆதிக்கம் இல்லாத காலத்தில் தங்கச்சி,அம்மா செண்டிமெண்ட், சித்தி,மாமியார் கொடுமைகள் போன்ற தீம்களில் படங்கள் எடுத்து மக்களை பொழுதுபோக்கியது.

·      கவிதைத்தனமாக பாடல்கள் எழுதியது. அதிலும் விரக்தி வகை பாடல் எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே. காதலில் தோல்வி அடைந்தவர்கள் (எத்தனையாவது காதல் என்றாலும்) கட்டாயம் கேட்கத் தூண்டும்.

எனக்கு இவர் எழுதிய பாடல்களில் மிகவும் பிடித்த வரிகள் மைதிலி என்னை காதலி படத்தில் இருந்து ’லங்கையிட்டால் ஒரு மாது’ பாட்டில் உள்ள

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி தாமரை பூ மீது விழுந்தனவோ இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ

·      இவருடைய இசையில் உருவான பாடல்களில் டூயட், சோகப் பாடல்கள் இன்றைக்கும் பலரால் FM களிலோ மியூசிக் சேனல்களிலோ கேட்கப்டுகிறது. பூக்கள் விடும் தூது,கிளிஞ்சல்கள்,பூக்களை பறிக்காதிங்க etc போன்ற
படங்களுக்கு பாடல்,இசை மட்டும் செய்துள்ளார்.




டிஆர்


·      இதுவரை இவர் கொடுத்த பேட்டிகளில் (அறிக்கைகள் அல்ல) கேட்ட கேள்விக்கு தகுந்த பதில் சொல்லாதது.

கற்பனையா ஒரு எடுத்துக்காட்டை இங்கு பார்க்கலாம்.

கேள்வி: ஒரு பாடலுக்கு  மட்டும்  குத்தாட்டம்  போடும்  நடிகைகளில்  உங்களுக்கு பிடித்தவர் யார் சார்?

பதில்: நீங்க பார்த்திங்கனா என்னுடைய ‘உறவைக் காத்தகிளி படத்தில் நான் சாராயம் குடிக்கிற மாதிரி நடிச்சுருப்பேன்.அது வெளித்தோற்றத்துக்குத் தான் சாராயம் அதுக்குள்ள இருந்தது பச்சை தண்ணி,ஈழப் பிரச்சனையில் இலங்கை ராணுவம் போர் தொடுத்த இடம் வன்னி.

இது போல எதாவது கூறுவார். இதுவரை கவனிக்காதவர்கள் எதாவது பேட்டியை யூ டியூபில்(YOU TUBE) காணவும்.

·      இப்பவும் நான் யூத் என்று கூறி ’ஒரு தலை காதல்’ படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறப்பது. இப்படம் கட்டாயம் இளைஞர்களுக்கு நகைச்சுவை விருந்தாக அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை!

·       நான் தான், நான் மட்டும் தான் பெரிய ஆள் என்று நினைக்கும் மனப்பான்மை.

கூலிக்காரன்,சம்சார சங்கீதம் போன்ற வருடைய படங்களில் கீபோர்ட் பிளேயராக இருந்த ஏ.ஆர் ரஹ்மானை ஆஸ்கார் வாங்கியதற்காக ஒரு சின்ன வாழ்த்துக்கூட சொல்லவில்லை என்பது ஒரு சோறு.


பேரரசு +

·       இளைய தளபதி விஜயை வைத்து இரண்டு படங்கள் இயக்கி அதை ஹிட் படமாக ஆக்கியது.

·      டும்டும்டும் படத்திற்கு வசனம் எழுதியது, ஆனால் டைட்டில் கார்டில் இவர் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது கூட மசாலா படங்களின் பக்கம் அவர் வருவதற்கு காரணம் ஆகியிருக்கலாம்.

·       B & C சென்டர் ரசிகர்களை திருப்தி படுத்தும் ஒரு மினிமம் கேரண்ட்டி டைரக்டராக இருப்பது.




பேரரசு



·      ஒரே மாதிரி ஹீரோயிச காட்சிகளை அவருடைய எல்லாப் படங்களிலும் வைத்து அரச்ச மாவை அரைப்பது..

·      படத்தில் அவர் தோன்றும் காட்சிகள் சூப்பர் ஸ்டார்க்கு படையப்பா படத்தில் இருக்கும் ஒபனிங் காட்சி அளவிற்கு பில்டப்பாக வைப்பது. அதே படத்தில் வந்த கே.எஸ்.ரவிக்குமார் மாதிரி தோன்றினால் ஏற்றுக்கொள்ளப்படும்.

·      படத்திற்கு இரு பாடலாவது செக்ஸ் மசாலா சேர்த்து அரைத்துவிடுவது.
விருது தரும் அளவிற்கு அவர் எழுதிய வரிவாடா வாடா வாட்டர் பாக்கெட்,காத்திருக்கு காலி பக்கெட்டு.


ஒற்றுமைகள்


·      இருவரும் தாய், தங்கை செண்டிமெண்ட் சார்ந்த தீம்களை பிரதானமாகக் கொண்டு படங்கள் எடுத்தது. இதில் டிஆர் எண்ணிக்கையில் அதிக படம் எடுத்துள்ளார்,கட்டாயம் ஒருநாள் பேரரசுவும் இதை சமன் செய்ய வாய்ப்புள்ளது.

என் தங்கை கல்யாணி திருப்பாச்சி
ஒரு தாயின் சபதம் சிவகாசி

மேல உள்ள படங்களை ஒப்பிட்டு கொள்ளவும் .

·      இருவர் எழுதிய பாடல்களும் பட்டி தொட்டிகளை கவர்ந்தது.

நான் ஒரு ராசி இல்லா ராஜா (ஒரு தலை ராகம்)
வச்சக்குறி தப்பாது இந்த புலி தோக்காது (கூலிக்காரன்)

கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாரியா  (சிவகாசி)
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததமா (திருப்பாச்சி)

·      சிறப்பு வேடங்களில் இருவரும் தாங்கள் இயக்கும் படங்களில் வந்து பன்ச் டயலாக் பேசுவது.

வேற்றுமைகள்

·      ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக படங்களில் வைத்தவர் பேரரசு.முந்தைய படங்களில் செண்டிமெண்ட்டும் பிந்தைய படங்களில் பிட் காட்சிகளும் (உதா: மோனிஷா என் மோனலிஷா) வைத்தவர் டிஆர்.

·       டிஆர் போல பேரரசு ஒரு படத்தின் ஹீரோவாக இன்னும் நடிக்கவில்லை. விரைவில் அரங்கேறலாம்.

·       நெகடிவ் கிளைமாக்ஸ் டிஆரின் சிறப்பு. சுபம் வகை பேரரசுவின் படங்கள்.

தொடர்ந்து இருவரும் என்ன செய்யலாம் :

·       டி.ஆர் பலமொழி வித்தகர் என்பதால் கன்னடம்,போஜ்பூரி போன்ற மொழிகளில் அவருடைய ஆரம்ப கால ஹிட் படங்களை (ஒரு தலை ராகம்,ரயில் பயணங்களில் போன்ற கிளாசிக்ஸ் தவிர்த்து) ரீமேக் செய்யலாம். சொல்லவே தேவையில்லை படங்களை இவர் தான் விநியோகம் செய்வார்.

·      அரட்டை அரங்கத்தை நிறுத்திவிட்டு நெடுந்தொடர் எடுக்கலாம். எனக்கு ஜோதிடமும் தெரியும் என்று டிஆர் கூறுவதால் எதோ ஒரு டிவியில் தினமும் காலை வேலைகளில் ராசி பலன்கள் சொல்லலாம்.

·      பேரரசு தெலுங்கில் அவருடைய பழனி,திருவண்ணாமலை ஆகிய படங்களை டப்பிங் செய்து வெளியிட்டதில் நல்ல லாபமாம், அதனால் கர்ணூல்,கடப்பா என்று நேரடி தெலுங்கு படம் எடுக்கலாம்.

·       ஒரு தடவை சென்னையில் இருந்து திண்டுக்கல் வரும் போது விக்கிரவாண்டி டாபாவில் பேருந்து 10 நிமிட இடைவெளிக்காக நின்றது. அங்கே ஒரு அண்ணன் ஆடியோ கடையில் ’கானா உலகநாதன் பாட்டு கேசட் இருந்தா கொடுங்கனு கடைக்காரரிடம் கேட்டார்.
அந்த உரிமையாளர் யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லும் பழக்கமில்லாத மெடிக்கல் சாப் முதலாளிகள் வகையறா போல (ஒரு மருந்து இல்லைனா அதற்கு பதில் வேறு கம்பெனி தயாரித்த மாத்திரை தருவாங்க) இந்த கேசட்டை கேட்டு பாருபா எல்லாமே கானா, குத்து பாட்டு தான் என்று குடுத்தார்.அது என்னானு பார்த்தால் அஜித்தின் திருப்பதி பாடல் கேசட். நிற்க

கானா உலகநாதன்,இத்யாதி, இத்யாதி போல பேரரசுவும் ஆடியோ கேசட் வெளியிடலாம்.

·      பேரரசு எழுதி டிஆர் பாடிய யம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி
பாடல் பட்டி தொட்டி எல்லாம் பின்னி பெடல் எடுத்ததோட மட்டும் நில்லாமல்
‘நான் கடவுள் படம் வரை ரீச் ஆனது.
அதனால் ’யம்மாடி ஆத்தாடி’ ’ஆண்டிப்பட்டி அரசம்பட்டி’  போன்ற பாடல்களை இருவரும் சேர்ந்து உருவாக்கலாம்.

o o o