Thursday, June 23, 2011

பத்து விதிகள்

1

மருமகளும் மாமியாரும்
ஒரே நேரத்தில்
பிள்ளை பெற்றால்
அண்ணி  அம்மா
முறைகள் இடம் மாறும்.

                                                                             
2

கன்னிப் பசங்களே
நீங்க
ஆக்ஸ்  அடிச்சுட்டு
ஸ்பரைட்  குடிச்சுட்டா
மட்டும் போதுமா?
நிறைய பொய்களும் தேவை
ஃபிகர் மடக்க!

3

நைய்டி போட்ட ஆன்ட்டி
குனிந்து தண்ணீர் பிடிக்கும் போது
நமக்கு வரும் விக்கலுக்கு
காமம் என்று பெயர்.


4

மக்களின் தாகத்தை
தீர்க்காவிட்டாலும்
சாலையின் தாகத்தை
கட்டாயம் தீர்த்து வைக்கும்
தண்ணீர் லாரிகள்.



5


பைக்கில் கட்டிப்பிடித்து செல்லும்
ஜீன்ஸ் அணிந்த பெண்களை
கண்டு எரிச்சல் அடைபவர்களுக்குள்
கொஞ்சம்
ராம்சேனா கொள்கை உண்டு.


 
6


விசேஷ வீடுகளில்
சக்கரை வியாதி
வெளியே தெரிந்துவிடக்கூடாது
என்று நினைப்பவர்கள்
தயக்கத்துடன் பாயாசம் குடிப்பார்கள்.

7

ஊரில் உள்ள
பெண்களை பற்றி
கிசுகிசு  பேசுபவர்களின்
உறவு பெண்களை
குறித்து உண்மையே சொன்னாலும்
தப்பு என்று சொல்லுவார்கள்.

8


அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ
பகலில் நைய்டி அணியும்
பெண்களுக்கு
துண்டு தான் துப்பட்டா.

9


தெருக்களில் விற்பவர்களிடமிருந்து
வாங்கினவர்களுக்கு
வந்த பின்
வாசிக்க மறுக்கும்
புல்லாங்குழல்.

10


யூ ட்யூப், இன்டர்நெட் போல
எது வந்தாலும்
நள்ளிரவு நடுநிசி காட்சி மட்டும்
படத்திற்கு என்றைக்கும்
மவுசு தான்.