Wednesday, June 8, 2011

லெமூரியாவில் இருந்த காதலியின் வீடு - லலிதானந்த்

ஒரு புத்தகத்தை வாங்கும் போது அதன் அட்டையில் போட்டிருக்கும் கவிதை,அணிந்துரை யார் எழுதியிருக்கா என்று முக்கியமாக பார்த்துவிட்டு உள்ளே நாலைந்து கவிதைகளை படிச்சபின் தான் அதை வாங்கும் பழக்கம் உள்ள எனக்கு, இந்த புத்தகத்தின் தலைப்பை மட்டும் பார்த்து வாங்கி ஏமாந்தது ஒரு பாடம்.

வேடசந்தூரில்(என் ஊர் தான்) வெளிவரும் கவிதைப்புயல் சிற்றிதழ் புகழ்
சுகுமார் பழைய விடுகதைகளையும்,காலண்டர் நோட்டுகளையும் ரீமேக் செய்து எழுதுவார்.
அப்படிபட்ட குப்பையே லலிதானந்தின் கவிதைகளை படித்தபின் ஒரு 100 மடங்கு பரவாயில்லைனு  சொல்ல தோணுது.

கிஞ்சித்தும் அர்த்தம் இல்லாத Statement வகை (மொக்கைகள் என்று சொல்வது கூட தவறு) கவிதைகளை எழுதி ஒரு தொகுப்பும் போட்ட லலிதானந்த் என்ற நாகலாபுரத்தானை பாராட்டத்தான் வேண்டும்.

நவீனக் கவிதை + அழகியல் ரொமான்ஸ் ஸ்டைல் இரண்டையும் கலந்து கேணத்தனமாக எழுதி ஒரு தனி ட்ரெண்ட் செட்டராக உருவாக நினைத்து இருப்பார் போல.

கீழிருக்கும் கவிதைகளே சாம்பிள்

வெட்டப்பட்ட குழிக்குள்
இறந்த யானையைப்
புதைத்தபோது
உறக்கம் கலைந்த
மண்புழுவின் நெளிவில்
புரண்டு படுத்தது பூமி
காதலின் அவஸ்தையுடன்


‘உன் மீன் தொட்டி
உடைந்து சிதறிய போது
கடலலைகளின் ஒருதுளி
என் இமைகளில்


‘தேச வரைபடத்திலுள்ள
ஆறுகளின் கோடுகளைப்போல
நரம்புகள் தெரியும் கையில்
தேங்காய் சிரட்டையை நீட்டி
தேநீர்க்கடை வாசலில்
அந்தக் கிழவி
கெஞ்சிக் கொண்டிருந்தபோது
நான் உனக்காகக்
காத்திருந்தேன்


இவருடைய என்னுரையில் அன்பை வழங்கும் நண்பர் நா.முத்துக்குமார்க்கு நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அட..அன்போடு உங்களின் சில கவிதை தொகுப்புகளையும் சேர்த்து கொடுத்து இருக்கலாமே முத்துக்குமார் அவர்களே!!

சரிங்க லலிதானந்த்.. எழுதினது எழுதிவிட்டிங்க..உங்களுக்கு சில சிபாரிசுகள் தயைகூர்ந்து படிங்க,அதற்கு பின் எழுதுங்க

காமத்துப்பால்- திருவள்ளுவர் 

காதல் மனப்பாடப் பகுதி வைகைசெல்வன்.

படிப்பவர்கள் யாராது இதை ஒரு Negative Marketing என்று புத்தகத்தை வாங்கி விஷ பரிட்சை செய்ய நினைத்தால்.
போதையில் Strict ஆ படிக்க வேண்டாம் ,சுத்தமா இறக்கிவிடும்.

பாதியிலே ஓடி வந்த படம் மாதிரி இதையும் சொல்லிகொள்ளலாம் பாதியில் மண்டைய காய வைத்த கவிதை தொகுப்புனு.

குமரன் பதிப்பகத்திற்குனு ஒரு வேண்டுகோள்.

உங்களுக்குனு ஒரு பேர்,Standard இருக்கு அதை கெடுக்க இது மாதிரி புத்தகங்களை போடுவதற்கு பதில் நீங்க 30 நாளில் கவிதை எழுதுவது எப்படி போன்ற புத்தகத்தை போட்டு லலிதானந்த் மாதிரி ஆட்களுக்கு மலிவு விலையில் கொடுக்கலாம்.
இப்படி விமர்சிக்க உனக்கு என்ன தகுதினு யாரும் கேட்காதிங்க!! இதுக்கு எல்லாம் டாக்டர் பட்டம் ஒண்ணியும் தேவையில்லை!!


(2009-04-14)

2 comments:

Unknown said...

பதிவுலகில் பரவாயில்லை என்று கூட யாரும் சொல்வதில்லை... இந்த திட்டு திட்ட நிறைய தைரியம் வேணும் வாழ்த்துக்கள்! அப்படியே நம்ம கடை பக்கமும் www.kannam.com வந்து கொஞ்சம் திட்டிவிட்டு போங்கள்! நல்ல விமர்சனங்களைப் பார்த்தே நாளாச்சு!

க.தமிழினியன் said...

@யோவ்

மிகுந்த நன்றி உங்கள் கமன்ட்க்கு! முதல் இரண்டு கவிதைகள படித்தேன்...புரியும் படி தான் எழுதி இருக்கீங்க ...விரைவில் எல்லாம் படித்து கருத்து சொல்கிறேன்!

அப்பறம் உங்களுக்கு நிறைய கமெண்ட்ஸ் வரத்தானே செய்கிறது..?நான் தான் வெளி பிளாக்கிற்கு புதுசு!